.
வேலை நிறுத்த ஆதரவு பதிவுகளில் 'உழைக்கும் வர்க்கம்' என்கிற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது உடலால் வேலை செய்வதுதான் உழைப்பு. மீதி எல்லாமே உழைப்பு இல்லை என்கிற சிந்தனாவாதம். இதுவும் எம்ஜியார் காலத்து சிந்தனைதான். நான் வாரத்துக்கு 70 மணி நேரம் அலுவல் வேலைகளை செயகிறேன். மீதி நேரம் என் நாவல், சில கன்சல்டன்சி, என் துறை பற்றிய தொடர் படிப்பு, என் விருப்பமான சப்ஜெக்ட்கள் பற்றிய படிப்பு என்று பிசியாக இருக்கிறேன். இதெல்லாம் உழைப்பு கேட்டகிரியில் வராதா?
வேலை நிறுத்த ஆதரவு பதிவுகளில் 'உழைக்கும் வர்க்கம்' என்கிற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது உடலால் வேலை செய்வதுதான் உழைப்பு. மீதி எல்லாமே உழைப்பு இல்லை என்கிற சிந்தனாவாதம். இதுவும் எம்ஜியார் காலத்து சிந்தனைதான். நான் வாரத்துக்கு 70 மணி நேரம் அலுவல் வேலைகளை செயகிறேன். மீதி நேரம் என் நாவல், சில கன்சல்டன்சி, என் துறை பற்றிய தொடர் படிப்பு, என் விருப்பமான சப்ஜெக்ட்கள் பற்றிய படிப்பு என்று பிசியாக இருக்கிறேன். இதெல்லாம் உழைப்பு கேட்டகிரியில் வராதா?
உடல் உழைப்பு என்பது என்பதை பெருமையாகவும், முக்கிய சேவையாகவும் பார்க்கப்பட்டது அந்தக்காலம். இன்று மூளை உழைப்பின் முக்கியத்துவம் எல்லாருக்கும் புரிந்து விட்டது. ஒருவர் எவ்வளவு உழைக்கிறார் என்பதை விட அவரின் உழைப்பின் திறமையின் மதிப்பு, productivity, இப்போது முக்கியமாக பார்க்கப் படுகிறது. அதாவது ஒருவர் 8 மணி நேரம் போடும் உழைப்புக்கு 100 ரூபாய் சம்பாதிக்கலாம். அடுத்தவர் அதே 8 மணி நேரத்தில் 10 ஆயிரம் சம்பாதிக்கலாம். சமூகத்துக்கு இரண்டாமவர்தான் முக்கியமானவராக இருப்பார். இருக்க வேண்டும். முதலமாவர் மேல் கருணை அல்லது பரிதாபம் வரலாம். ஆனால் 100 ரூபாய் உழைப்பாளியை 10 ஆயிரம் உழைப்பாளியை விட பெரிதும் மதித்தால் நாம் தவறான கண்ணோட்டத்தை கொண்ட சமூகத்தை உருவாக்குகிறோம் என்று அர்த்தம்.விஜயகாந்த் ஒரு படத்தில் எம்ஏ படித்து முடித்து விட்டு ஆனால் வேறு ஆபீஸ் வேலை எதுவும் செய்யாமல் ரிக்ஷா ஓட்டுவார். 'உழைப்பின் முக்கியத்துவத்தை' சமூகத்துக்கு உணர்த்த வேண்டி அப்படி செய்வதாக நியாயப் படுத்துவார். அந்த மாதிரி நகைச்சுவை அவலம்தான் சமூகத்தில் நிலவும்.
தவிர, நான் முன்பே 'ரஹ்மான் ரோபோ' என்கிற கட்டுரையில் குறிப்பிட்டது மாதிரி ஆட்டோமேஷன் துறையின் முன்னேற்றங்கள் நம் எல்லார் வேலைக்கும் உலை வைக்கப் போகின்றன. அதில் முதலில் காலியாகப் போவது 'உடல் உழைப்பு' சம்பந்தப்பட்ட வேலைகள்தான். ஏனெனில் அதுதான் ரோபோட்கள் சுலபமாக செய்ய முடிந்தவை. இப்போதே driverless cars பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் முன்னேறிக் கொண்டு இருக்கின்றன. உலகில் பாதி ரயில்கள் இன்றைக்கு ட்ரைவர் இல்லாமல் இயக்கப் படுகின்றன. தில்லி மெட்ரோவில் ஒரு லைனில் அடுத்த வருடம் முதல் ட்ரைவர் இருக்கப் போவதில்லை. இன்னும் பத்து வருடங்களுக்குள் ட்ரைவர் தேவைப்படாத பஸ், கார், ரயில்கள் உலகெங்கும் வந்து விடும். இந்தியாவிலேயே அவற்றின் சாத்தியக்கூறுகள் சோதிக்கப் பட்டு வருகின்றன. டாடாவின் எல்க்ஸி நிறுவனம் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றது கொஞ்ச நாளைக்கு வேலைகளை பாதுகாக்கிறோம் என்று அரசு இந்த வண்டிகளை தடை செய்யலாம். ஆனால் இவை வந்தே தீரும். அதே போல விவசாயம், தொழிற்சாலைகளில் assembly line வேலைகள் இவை யாவையும் ரோபோட்டுகள் கையகப் படுத்தி விடும்.
அப்போது உழைக்கும் வர்க்கம் என்று சிட்டி வகையறாக்களை கட்டிப் பிடித்துக் கொண்டுதான் எம்ஜியார் பாடல்களை பாட வேண்டிவேண்டி இருக்கும்.

No comments:
Post a Comment