.
(29 ஏப்ரல் 2017)
பாகுபலி வெறும் சினிமா, அதற்குப் போய் இவ்வளவு அலப்பறையா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. சினிமாவும் நம் பொதுக் கலாச்சாரத்தின் அங்கம்தான், என்பது ஒரு புறம் இருக்க, முக்கியமாக நான் பாகுபலியின் வெற்றியை கவனிக்கிறேன். அது அவர்களுக்கு எளிதாக வாய்க்கவில்லை. வங்கியைக் கொள்ளையடித்தோ அல்லது ஈமு கோழி திட்டம் தீட்டியோ ராஜமவுலி அந்தப் பணத்தை சம்பாதிக்கவில்லை. அவரின் வெற்றிக்குப் பின்னால் தன்னம்பிக்கை, பெரும் கற்பனைத் திறன், கடும் உழைப்பு மற்றும் அதீத துணிச்சல் இருந்திருக்கிறது. நான் அதனைக் கொண்டாடுகிறேன்.
(29 ஏப்ரல் 2017)
பாகுபலி வெறும் சினிமா, அதற்குப் போய் இவ்வளவு அலப்பறையா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. சினிமாவும் நம் பொதுக் கலாச்சாரத்தின் அங்கம்தான், என்பது ஒரு புறம் இருக்க, முக்கியமாக நான் பாகுபலியின் வெற்றியை கவனிக்கிறேன். அது அவர்களுக்கு எளிதாக வாய்க்கவில்லை. வங்கியைக் கொள்ளையடித்தோ அல்லது ஈமு கோழி திட்டம் தீட்டியோ ராஜமவுலி அந்தப் பணத்தை சம்பாதிக்கவில்லை. அவரின் வெற்றிக்குப் பின்னால் தன்னம்பிக்கை, பெரும் கற்பனைத் திறன், கடும் உழைப்பு மற்றும் அதீத துணிச்சல் இருந்திருக்கிறது. நான் அதனைக் கொண்டாடுகிறேன்.
யோசித்துப் பார்த்தால் சாதனை படைக்கும் எல்லா வெற்றிக்குப் பின்னும் இந்த நான்கும் இருந்திருக்கிறது. மும்பையில் நல்ல வேலையை விட்டு விட்டு மனைவின் நகைகளை விற்று பெங்களூரில் ஒரு சிறிய ஃபிளாட்டில் இன்போஸிஸ் ஆரம்பித்த நாராயண மூர்த்தியிடம் அது இருந்திருக்கிறது. ' கடனை எல்லாம் அடைக்க வேண்டாம். திவால் நோட்டிஸ் கொடுத்து தப்பித்து விடலாம்,' என்று தன்னிடம் அறிவுரை சொல்லப்பட்ட போது அப்படி செய்யக் கூடாது என்று முடிவெடுத்த அமிதாப் பச்சனிடம் அந்த நான்கும் இருந்திருக்கிறது. எல்லாரும் கைவிட்டு, இது வேலைக்கே ஆகாது, இந்த ஆள் ஒரு பைத்தியக்காரன் என்று ஸ்டூடியோக்களே விலகிப் போன பிறகும் பிடிவாதமாக தன் சொந்தப் பணத்தை எல்லாம் போட்டு டைட்டானிக் படத்தை எடுத்து முடித்த ஜேம்ஸ் கேமரானிடம் இருந்திருக்கிறது.
ஒவ்வொரு வெற்றியையும் கூர்ந்து நோக்குங்கள். பொச்சரிப்பு, பொறாமை, எரிச்சல், போலி கம்யூனிஸம் இதெல்லாம் இல்லாமல் அவர்களைப் பெருமையுடன் பாருங்கள். மனம் லேசாகும். வெற்றி பெற்றவர்கள்தான் இந்த உலகத்தை அருமை மிகுந்ததாக ஆக்குகிறார்கள். அவர்களைக் கொண்டாடுவதன் மூலம் நாமும் அந்த அருமைமிகு உலகில் ஐக்கியமாகலாம். இந்த உலகில் மல்லையாக்கள் தினகரன்கள் மட்டும் இல்லை, நாரயண மூர்த்திகள், ராஜமவுலிகள், ஜேம்ஸ் கேமரான்கள், ஸ்டீவ் ஜாப்ஸ்கள் இவர்களும் கூட இருக்கிறார்கள், என்பது பெருமளவு பாதுகாப்பாக நம்மை உணர வைக்கலாம். நமக்கு ரோல் மாடல்கள் எங்கே தேடுவது என்று குழம்பாமல் இருக்க வைக்கலாம்.
எல்லார் வெற்றிகளையும் கொண்டாடுங்கள். அது நாளை நம்முடைய வெற்றிக்கும் கிரியா ஊக்கியாக அமையலாம்.

No comments:
Post a Comment